அதிரடிப்படை புது எஸ்.பி. பொன்.மாணிக்கவேல்
சென்னை:
சிறப்பு அதிரடிப்படை கண்காணிப்பாளராக பொன். மாணிக்கவேல்நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிரடி காவல்துறை அதிகாரியான பொன்.மாணிக்கவேல் அதிமுக ஆட்சி காலத்தில்செங்கை கிழக்கு,சேலம், கோவை ஆகிய மாவட்டங்களில் எஸ்.பியாகபணியாற்றினார். தனது சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்குசசிகலாவிடம்சிறப்பு அன்பு கிடைத்தது.ஆனால், பணியாற்றிய இடமெல்லாம் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார் பொன்.
இந் நிலையில் அதிமுக ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் பெரிய வம்பில் மாட்டினார்.இதனால் பொன்.மாணிக்கவேல் கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டார்.
தற்போது அவருக்கு டப்பா பதவியாகத் தேடித் தந்துள்ளது திமுக. ஈரோட்டில் உள்ளசிறப்பு அதிரடிப்படைக்கு (வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்ட காவல்படை)எஸ்.பியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் படைக்கு இப்போது வேலை என்று ஏதும் இல்லை. காட்டுப் பகுதியில் சும்மாநிலை கொண்டுள்ளது இந்தப் படை.
இதேபோல மேலும் 8 காவல்துறை அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர்.
பொன்.மாணிக்கவேலுக்கும் சென்னை இணை கமிஷ்னர் ஜாங்கிட்டும் எப்போதுமேஏழாம் பொறுத்தம் என்பது குறிப்பட்டத்தது. திமுக ஆட்சிக்கு வந்த பின்ஜாங்கிட்டுக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளது.
தனது செல்வாக்கை பயன்படுத்தியே பொன். மாணிக்கவேலை அதிரடிப்படைக்குபோக வைத்துவிட்டார் ஜாங்கிட் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications