பெப்சி: அன்புமணிக்கு யோகா நிபுணர் சவால்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
விஷம் கலந்த பெப்சி, கோககோவை இந்தியாவில் விற்க அனுமதிக்கும் மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணிராமதாஸ், உடலுக்கு நலம் பயக்கும் பாகற்காய் ஜூஸ், துளசி சாறு, வெள்ளரிக்காய் ஜூஸ் ஆகியவற்றைவெளிநாடுகளில் விற்பனை செய்ய உதவத் தயாரா என்று பிரபல யோகாசான நிபுணர் பாபா ராம்தேவ் சவால்விட்டுள்ளார்.
பிரபல யோகா நிபுணரான ராம்தேவ் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கினார். அவரது ஆசிரமத்தில் தயாரிக்கப்படும்ஆயுர்வேத மருந்துகளில் எலும்புத் துண்டுகள் இருப்பதாக மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் எம்.பி. பிருந்தா காரத் புகார்கூறினார். இதை ராம்தேவ் மறுத்தார்.இந்த சர்ச்சை சற்றே ஓய்ந்துள்ள நிலையில் இப்போது மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணிக்கு பெப்சிவிவகாரத்தில் சவால் விட்டுள்ளார் ராம் தேவ்.இதுகுறித்து அவர் கூறுகையில், நச்சுப்பொருட்கள் நிறைந்த பெப்சி, கோலாவை இந்தியாவில் விற்பதில்தப்பில்லை என்ற ரீதியில் பேசியுள்ளார் மத்திய சுகாதார அமைச்சர். நச்சுப் பொருட்களைக் கொண்ட வெளிநாட்டுகுளிர்பானங்களை இங்கே விற்க உதவும் சுகாதார அமைச்சர், உடலுக்கு நலம் பயக்கம் பாகற்காய் ஜூஸ்,வெள்ளரிக்காய் ஜூஸ், துளசிச்சாறு போன்ற நமது ஊர் இயற்கை பானங்களை வெளிநாடுகளில் விற்பனைசெய்ய உதவுவாரா என்று கேட்டுள்ளார் ராம்தேவ்.












Click it and Unblock the Notifications