குன்றக்குடி அடிகளார், சாலமன் பாப்பையாவுக்கு விருது
Subscribe to Oneindia Tamil
பரமக்குடி:
குன்றக்குடி அடிகளார், தமிழறிஞர் சாலமன் பாப்பையா ஆகியோருக்கு இஸ்லாமியதமிழ் இலக்கிய கழகம் தமிழ் மாமணி என்ற விருதினை வழங்குவதாகஅறிவித்துள்ளது.
இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் 12வது மாநில மாநாடு ராமநாதபுரம்மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 9 மற்றம் 10 ஆகிய தேதிகளில்நடைபெறவுள்ளது.9ம் தேதி தொடக்க விழாவில் பல்வேறு அறிஞர்கள் எழுதிய நூல்கள்வெளியிடப்படுகின்றன. இதுதவிர ஆய்வரங்கம், மகளிர் அரங்கம், பட்டிமன்றம்ஆகியவை நடைபெறும்.
10ம் தேதி உரையரங்கம், கவியரங்கம் மற்றம் தமிழ்மாமணி, சேவைச் செம்மல் ஆகியவிருதுகள் வழங்கும் நிகழ்சசி நடைபெறும்.
ஆன்மீகத்திற்கும், தமிழ் வளர்ச்சிக்கும் உற்ற சேவை புரிந்து வரும் குன்றக்குடிபொன்னம்பல அடிகளார், தமிழறிஞர் சாலமன் பாப்பையா ஆகியோருக்கு தமிழ்மாமணி விருது வழங்கப்படவுளள்ள தாக அமைப்பின செய்திக் குறிப்புதெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications