சென்னை-பெங்களூர் இடையே விரைவில் புல்லட் ரயில்!
பெங்களூர்:
சென்னைக்கும், பெங்களூருக்கும் இடையே அதிவேக புல்லட் ரயிலைஅறிமுகப்படுத்த மத்திய அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் சென்னை-பெங்களூர் இடையிலான பயண நேரம் ஒரு மணி நேரமாககுறையும்.
நாட்டின் மூன்றுமுக்கிய வழித் தடங்களில் புல்லட் ரயில்களை அறிமுகப்படுத்தமத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செயதுள்ளது. சென்னை-பெங்களூர்,மும்பை-புனே, டெல்லி-ஜெய்ப்பூர் ஆகியவையே அந்தமுக்கிய நகரங்கள்.இந்தத் திட்டம் தொடர்பான ஆய்வுப் பணிகளும், பேச்சுவார்ததைகளும்தொடங்கியுள்ளன. திட்ட அமலாக்கத்திற்கு சிறிது நாட்கள் பிடிககும் என்றாலும் கூடஇந்தக் கனவு விரைவில் நனவாகும் நாள் தொலைவில் இல்லை என்று ரயில்வேவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இத்திட்டப்படி இந்த நகரங்களுக்கிடையிலான ரயில்பாதையில் தண்டவாளங்கள்காந்த மயமாக்கப்படும். இதற்கு பெரும் பொருட் செலவாகும். அதாவது ஒரு கிலோமீட்டருக்கு ரூ.200 முதல் 300 கோடி வரை செலவு பிடிக்கும் எனமதிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்காக தற்போது உள்ள தண்டவாளங்களை எடுத்துவிட்டு காந்த தன்மை கொண்ட புதிய தண்டவாளங்கள் போடப்படும்.
புல்லட் ரயில்கள் மணிக்கு குறைந்தது 250 கிலோ மீட்டர் முதல் அதிகபட்சம் 400கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியவை. இதன்படி சென்னை, பெங்களூர்இடையிலான பயண நேரம் 1 மணிநேரமாக குறையும். விமான பயணத்தை விடசற்றே குறைந்த அளவில் பயணக் கட்டணம் இருக்கும் என்பதால் விமானபயணிகளையும் இந்தத் திட்டம் ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications