விநாயகர் சதுர்த்தி: தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்
சென்னை:
விநாயகர் சதுர்த்தி தமிழகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
விநாயகர் சதுர்த்தி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் வழக்கமானஉற்கசாகத்துடன் மக்கள்விநாயகரை வழிபட்டு வருகின்றனர்.விநாயகர் கோவில்களில் பக்தர் கூட்டம் அலைமோதுகிறது.விநாயகருக்கு சிறப்பு பூஜைகள், அரச்சனைகள்,வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. கணபதி ஹோமங்களும் நடத்தப்பட்டன.திருச்சியில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான பக்தர்களநீண்ட வரிசையில் நின்று பிள்ளையாரை வழிபட்டனர்.
30 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கொழுக் கட்டை விநாயகருக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது.இதேபோல சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உளள கற்பக விநாயகர் கோலிலும் விநாயர்சதுர்த்திமிகவும் விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிள்ளையார்பட்டி கோவிலுக்குவந்து வழிபட்ட வண்ணம் உள்ளனர்.
இதே போன்ற உற்சாகம் தமிழகததின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகிறது. விநாயகர் சதுர்த்திவிழாவையொட்டி தமிழகம் முழுவதும் போலீஸார் தீவிரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாபபுப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications