விமான நிலையத்தில் தம்: பிரெஞ்சு பத்திரிக்கையாளரைகட்டி வைத்து அடித்த பாதுகாவலர்கள்!
சென்னை:
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளரை சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழிலகபாதுகாப்புப்படை வீரர்கள் தாக்கிய தால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லெமன்ட் என்ற நாளிதழில் நிருபராக இருப்பவர் செல்ஜுய் கெய்ஸால்க்ல்ஸ். இவர்தனது மனைவியுடன் இன்று காலை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தார். பிராங்க்பர்ட் செல்லும்லூப்தன்ஸா விமானத்தில் அவர் பயணம் செயயவிருந்தார்.பாதுகாப்புசோதனைகள், விசா ஆய்வு ஆகியவைடிந்த பின்னர் கெய்ஸால்க்ஸ் தம்பதி விமானத்தில் ஏறுவதற்குபாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்தனர். அந்த இடத்தில் புகை பிடிக்க அனுமதி கிடையாது. ஆனால் அதுதெரியாமல், கெய்ஸால்க்ஸ் சிகரெட் பற்ற வைத்து புகை பிடிக்க ஆரம்பித்தார்.
இதைப் பார்த்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர்கள் பிரெஞ்சு நிருபரை நெருங்கி இங்கே புகைபிடிக்ககூடாது எனறுகூறினர. ஆனால் அதை கெய்ஸால்க்ஸ் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து அவருக்கும்,வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. இதில் நருபரை வீரர்கள் அடித்ததாக தெகிறது.
அத்தோடுநல்லாமல், பாதுகாப்பு வீரர்கள் தங்கும் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று கெய்ஸால்க்ஸைஅங்கிருந் தூணில் வைத்து கட்டினர். பின்னர் பாண்டிச்சேரியில் உள்ள பிரெஞ்சு தூதரகத்திற்கு தகவல்கொடுத்தனர்.
இந்த களேபரத்திற்கு மத்தியில் பிராங்க்பர்ட் செல்லும் விமானம் குறித்த நேரத்தில் புறப்பட்டுச் சென்று விட்டது.தகவல் கிடைத்ததும், பாண்டிச்சேரியில உள்ள பிரெஞ்ச் துணைத் தூதரக அதிகாரிகள் கெளசல்யாதேவி சென்னைவிரைந்துவந்தார்.
விமான நிலைய அதிகாரிகளுடன் அவர் பேச்சுவாரத்தை நடத்தினார். பிரச்சினையை சுமூகமாக முடித்து பிரெஞ்சுதம்பதியை அவர்களது நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாளை அவர்கள் இருவரும்பிரான்ஸுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications