மறுமணம் புரிந்தார் ஜீவஜோதி!
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
சரவணபவன் ராஜகோபால் விவகாரத்தில் அடிபட்ட இளம் பெண் ஜீவஜோதிக்கு, தஞ்சாவூரில் இன்று வெகுவிமரிசையாக மறுமணம் நடந்தது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை பூர்விமாகக் கொண்ட ஜீவஜோதி தனது காதல் கணவர் பிரின்ஸ்சாந்தகுமாருடன் சென்னை வேளச்சேரியில் வசித்து வந்தார். அவர்களது அமைதியான வாழ்க்கையில் சரவணபவன் அதிபர் ராஜகோபால் நுழைந்ததால் பெரும் புயல் வீசியது.இந்த புயலில் சிக்கி பிரின்ஸ் சாந்தகுமார் உயிரிழந்தார். தற்போது ராஜகோபால் மீது சாந்தகுமாரை கொன்றவழக்கு, ஜீவஜோதியை அடியாட்களுடன் சென்று மிரட்டியது ஆகிய இரு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் தனது குடும்பத்தினருடன் தஞ்சையில் வசிதது வரும் ஜீவஜோதிக்கு, 2வது திருமணம் செய்துவைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதற்கு ஜீவஜோதியும் ஒபபுக்கொண்டார்.
இதையடுத்து ஜீவஜோதியின் பள்ளித் தோழரான தண்டபாணிக்கும், ஜீவஜோதிக்கும் திருமணம் நிச்சயமானது.இன்று காலை தஞ்சையில் வெகு விமரிசையாக இவர்களது திருமணம் நடைபெற்றது. இரு வீட்டார், உறவினர்கள்மற்றும் பொதுமக்களும் ஏராளமான பேர் திரண்டு வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.












Click it and Unblock the Notifications