ஈழப் பிரச்சினையில் இந்தியா உதவ வேண்டும்: விக்கிரமசிங்கே
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கை இனப் பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண இந்தியா உதவ வேண்டும் எனமுன்னாள் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.சனிக்கிழமை மாலை சென்னைக்கு வந்த விக்கிரமசிங்கே விமான நிலையத்தில்செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் நிலைமை மேலும்மோசமடைந்துள்ளது.
இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான சுமூக தீர்வு ஏற்பட இந்தியா உதவவேண்டும். இந்த விஷயத்தில் இந்தியா, இலங்கைக்கு உதவி வருகிறது. இது தொடரவேண்டும். அதே சமயத்தில் நேரடியாகவும் தலையிட வேண்டும் என்று கூறினார்விக்கிரமசிங்கே.
இன்று ஒரு நாள் சென்னையில் தங்கியிருக்கும் விக்கிரமசிங்கே பல்வேறுதலைவர்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். மாலையில் மீண்டும் இலங்கை திரும்பிச்செல்கிறார்.












Click it and Unblock the Notifications