அமைதியாக நடந்த விநாயகர் சிலை கரைப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் சனிக்கிழமை மாலை நடந்த விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும்நிகழ்ச்சி அமைதியாக நடந்து முடிந்தது.
சென்னை மாநகரிலும், புறநகர்களிலும் விநாயகர் சதுர்த்தியையொட்டிவைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நேற்று முதல் கடலில் கரைக்கப்பட்டுவருகின்றன.நேற்று பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட சிலைகள்பட்டினப்பாக்கம் பகுதியில் கடலில் கரைக்கப்பட்டன. அது தவிர ராயபுரம்,நீலாங்கரை ஆகிய பகுதிகளிலும் கடலில் சிலைகள் கரைக்கப்பட்டன.
வீடுகள், தெருக்கள், சாலைகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் பலத்த போலீஸ்பாதுகாப்புக்கு மத்தியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில்கரைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியையெட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டிருந்தது. அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே ஊர்வலங்கள் செல்லஅனுமதிக்கப்பட்டன.
இன்றும் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications