சம்பூரை மீட்டுவிட்டோம்: இலங்கை ராணுவம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

விடுதலைப் புலிகள் வசம் இருந்த சம்பூரை கடும் சண்டைக்குப் பின்னர் மீட்டுள்ளதாகஇலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தாக்குதலை நிறுத்துவதாகவும்ராணுவம் கூறியுள்ளது.

இலங்கையின் கிழக்குப் பகுதியில் திரிகோணமலை துறைமுகம் அருகேஉள்ளமுக்கியமான பிராந்தியம்தான் சம்பூர். இப்பகுதி விடுதலைப் புலிகளின்கட்டுப்பாட்டில் இருந்தது.

இப்பகுதியை மீட்க ராணுவம் கடும் தாக்குதலை தொடங்கியது. விடுதலைப் புலிகளும்பதில்தாக்குதல் தொடுத்ததால் சம்பூரைப் பிடிக்கும் ராணுவத்தின் முயற்சி தடைபடடது.

கடந்த சில நாட்களாக நடந்த கடும் சண்டையின் இறுதியில் சம்பூரைகைப்பற்றிவிட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தப் பகுதியிலிருந்துதான்திரிகோணமலை கடற்படைத் தளத்தை புலிகள் கடுமையாக தாக்கி வந்தனர்.

மேலும் யாழ்ப்பாணத்திற்குச் செல்லும்முக்கிய சாலைப் பகுதியையும் இங்கிருந்துதான்புலிகள் தகர்த்தனர்.

தற்போது புலிகள் வசமிருந்து சம்பூர் மீட்கப்பட்டு விட்டதாக ராணுவ செய்தித்தொடர்பாளர் கெகிலிய ரபுக்வெல்லா, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம்தெரிவித்தார். அவர் கூறுகையில், கடல் புலிகளின் முகாம்கள் அடங்கியதிரிகோணமலை பகுதி முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதுஎன்றார்.

ஆனால், சம்பூரில் புறப் பகுதிகளில் தாங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகபுலிகள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே இந்தப் பகுதியில் இருந்து புலிகள் தாங்களவே பின்வாங்கியுள்ளதாகவும், அவர்கள் வேறு இடத்தில் திடீர் தாக்குதல் நடத்தக் கூடும்என்றும் பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஜேன்ஸ் டிபன்ஸ் வீக்லியின் ஆய்வாளர் இக்பால் அதாஸ் கூறுகையில,

இந்தப் பகுதியில் கடல் புலிகளின் நினைவிடம், புலிகள் அலுவலகம் தவிர சிலகட்டடங்கள் தான் உள்ளன. ராணுவம் தொடர்ந்து ஆர்ட்டிலரி தாக்குதல் தொடுத்ததால்புலிகள் பின் வாங்கியுள்ளனர் என்றார்.

பதிலுக்கு புலிகள் வேறிடத்தில் தாக்குதல் நடத்தக் கூடும் என்று நிபுணர்கள்தெரிவித்துள்ளனர்.

மறுவாழ்வு அமைப்பின் நிதி முடக்கம்:

இதற்கிடையே தமிழ் மறுவாழ்வு மையத்தின் 7.5 லட்சம் டாலர் நிதியை கொழும்பின்சென்ட்ரல் வங்கி முடக்கியுள்ளது. இந்த நிதி சுனாமி நிவாரணம் உள்ளிட்டபணிகளுக்காக திரப்பட்டது. ஆனால், இந்த நிதி புலிகள் ஆயுதம் வாங்குவதற்காகதிருப்பிவிடப்பட்டு வருவதாக சென்ட்ரல் வங்கியின் புலனாய்வு அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

மேலும் நிவாரணப் பணிகளையும் இலங்கை ராணுவம் தடுத்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+