இவர் இனி திராவிடன் கேப்டன் விஜயகாந்த்!
பழனி:
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை இனிமேல் கட்சியினர் திராவிடன் கேப்டன்விஜயகாந்த் என அழைக்க வேண்டும் என அக்கட்சி அறிவுறுத்தியுள்ளது.
விஜயகாந்த் கட்சியின் பெயரில் திராவிட என்ற வாசகம் இருப்பதை முதல்வர்கருணாநிதி சமீபத்தில் விமர்சித்திருந்தார். இதனால் கோபமடைந்த விஜயகாந்த்,நானும் திராவிடன்தான் என்று கருணாநிதிக்கு பதில் தந்தார்.இந்த சர்ச்சையைத் தொடர்ந்து தேமுதிக தலைமை புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.அதாவது இனிமேல் தங்களது தலைவர் விஜயகாந்த்தை கேப்டன் என்று மட்டும்கூப்பிடாமல் கூடவே திராவிடன் என்ற பெயரையும் சேர்த்துக் கூப்பிட அவர்கள்தீர்மானித்துள்ளனர்.
கட்சியின் முதலாமாண்டு விழா வரும் 17ம் தேதி நெல்லையில் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக கட்சியினருக்கு தலைமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பேனர்கள்,போஸடர்கள், வரவேற்பு வளைவுகள் உள்பட விழா தொடர்பான அனைத்திலும்திராவிடன் கேப்டன் விஜயகாந்த் என இடம் பெற்றிருக்க வேண்டும் எனஉத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே இனிமேல் விஜயகாந்த், திராவிடன் கேப்டன் விஜயகாந்த் என்று தான்அழைக்கப்படுவார்.
நான் விஜயகாந்த்தை திராவிடன் இல்லை என்று சொல்லவே இல்லை. 20ஆண்டுகளுக்கு முன்பே எனது காலம் முடிந்திதருந்தால, விஜயகாந்த் போன்ற பழையநண்பர்களின் விமர்சனத்தை கேட்கவேண்டிய நிலை ஏற்படாமல் போயிருக்கும் என்றுகருணாநிதி கூறியிருந்தார்.
இதற்கு வரும் 17ம் தேதி நெல்லை விழாவில் பதிலளிப்பதாக விஜயகாந்த்கூறியுள்ளது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications