மும்பை-துபாய் விமானத்தில் குண்டு புரளி
Subscribe to Oneindia Tamil
துபாய்:
மும்பையிலிருந்து துபாய் சென்ற விமானத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலால் பெரும் பரபரப்ஏற்பட்டது.
மும்பையில் இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் (ஐ.ஏ. 683) துபாய் சென்று கொண்டிருந்த நிலையல்டெல்லியில் உள்ள இந்தியன் ஏர்லைன்ஸ் அலுவலகத்துக்கு ஒரு மிரட்டல் தொலைபேசி வந்தது.அதில் பேசிய நபர் துபாய் செல்லும் விமானத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந் நிலையில் விமானம் துபாயை நெருங்கிவிட்டது. இதையடுத்து துபாய் விமானக் கட்டுப்பாட்டு அறைக்குதகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்த விமானம் துபாய் விமான நிலையத்துக்குப் பதிலாக அருகே உள்ளஇன்னொரு ராணுவ விமான தளத்தில் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் முழு சோதனை நடத்தப்பட்டதில் குண்டு ஏதும் சிக்கவில்லை.












Click it and Unblock the Notifications