தமிழகத்துக்கு கேரளா வெவரமான அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:

முல்லை பெரியாறு அணை பிரச்சனையை விட்டுவிட்டு, புதிய அணை கட்டிக் கொள்ளுங்கள் என தமிழகமுதல்வர் கருணாநிதிக்கு கேரள முதல்வர் அச்சுதானந்தன் கடிதம் எழுதியுள்ளார்.

அவரது கடித விவரம்:

முல்லை பெரியாறு அணைக்கட்டில் இப்போதுள்ள நிலைமை தொடர வேண்டும். இரண்டு மாநில மக்களுடையகோரிக்கைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். இது தொடர்பாக நாம் இருவரும் கலந்து பேசி ஆராய்ந்து ஒருமுடிவுக்கு வரலாம்.

பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்குவதை கேரளா எதிர்க்கவில்லை. அதே சமயத்தில்அணைக்கட்டின் உயரத்தை தற்போதுள்ள 136 அடிக்கு மேல் உயர்த்துவதைத்தான் கேரளா அரசு எதிர்க்கிறது.

ஏனெனில் அணையில் உயரத்தை அதிகரித்தால் அது கேரளாவுக்கு ஆபத்தாக முடியும். அணையில் உயரத்தைஅதிகரிக்கும்போது அணை உடைய வாய்ப்புகள் உள்ளது. அவ்வாறு அணை உடைந்தால் பல கிராமங்கள்தண்ணீரில் மூழ்கும். 600 ஹெட்டேர் நிலங்களும் தண்ணிரில் மூழ்கும். பெரும் பொருட்சேதம் ஏற்படும் எனதெரியவந்துள்ளது.

இப்படி ஒரு ஆபத்து இருக்கிறது என தெரிந்த பின்னர் எங்களால் சும்மா இருக்க முடியுமா? தமிழ்நாட்டுக்குகூடுதலாக தண்ணீர் கிடைக்க வேண்டும் என்றால் ஒரு புதிய அணை கட்டிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

உயரத்தை அதிகரிக்கும் அளவுக்கு அணை பலமாக உள்ளதாக பல நிபுணர்கள் கூறிவிட்ட நிலையில், நிபுணர்அச்சுதானந்தனுக்கு மட்டும் அணையின் பலத்தில் பெரும் சந்தேகம் வந்துள்ளது.

புதிய அணையை கட்டும் செலவு தமிழகத்தின் பட்ஜெட்டில் பெரும் ஓட்டைப் போடும் என்பதால் இந்தயோசனையை கூறியுள்ளார் அச்சுதானந்தன் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+