For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தடையை மீறி கோவிலில் நுழைந்த தலித் மக்கள்

By Staff
Google Oneindia Tamil News

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் கொசப்பாடி கிராமத்தில் உள்ள கோவிலில் தலித் சமூகத்தினர்நுழைந்து சாமி கும்பிட்டதால் அங்கு அவர்களுக்கும், இன்னொரு சமூகத்தினருக்கும்இடையே மோதல் வெடித்தது.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது கொசப்பாடி கிராமம். இங்குள்ளகோவிலில் விழா எடுத்து சிறப்பாக கொண்டாட அக்கிராமத்தைச் சேர்ந்த தலித்சமூகத்தினர் முடிவு செய்தனர். ஆனால் இதற்கு இன்னொரு ஜாதியினர் எதிர்ப்புதெரிவித்தனர். கோவிலுக்குள் தலித் மக்கள் நுழையக் கூடாது என ஆட்சேபித்தனர்.

இதனால் கிராமத்தில் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து கள்ளக்குறிச்சி வருவாய்கோட்டாட்சியர் ஜெயபால் கிராமத்திற்கு வந்து இரு தரப்பினரையும் சந்தித்துப்பேசினார்.

அப்போது, கோவிலின் இரண்டாவது நுழைவாயில் வரை மட்டும் தான் தலித்சமூகத்தினரை அனுமதிப்போம் என இன்னொரு சமூகத்தினர் கூறினர்.

இந் நிலையில், இன்று காலை 50க்கும் மேற்பட்ட தலித் சமூகத்தினர் கோவில் வாசலைதிறந்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் சாமி கும்பிட்டனர். இதனால்கோபமடைந்த எதிர் தரப்பினர் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் மீது தாக்குதல்நிடத்தினர்.

இதில் சில போலீஸார் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்திவன்முறையில் இறங்கிய கும்பலை விரட்டியடித்தனர்.

தொடர்ந்து நிலைமை பதட்டமாக இருப்பதால் கடலூரிலிருந்து ஆயுதப் படைபோலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, தங்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்தவர்களை கண்டித்துசங்கராபுரம் சாலையில், 150க்கும் மேற்பட்ட தலித் சமுதாய மக்கள் சாலை மறியலில்ஈடுபட்டதால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X