8ம் வகுப்பு மாணவியை கடத்தி, கற்பழிப்பு
Subscribe to Oneindia Tamil
சேலம்:
பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஐடிஐ மாணவர் கைதுசெய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் ஆத்துரைச் சேர்ந்தவர் மோகன்குமார் (23) தனியார் ஐடிஐயில்படித்து வருகிறார். இவரது வீட்டின் எதிரே வசிப்பவர் பள்ளி மாணவி ஜான்சி (பெயர்மாற்றப்பட்டுள்ளது). 8ம் வகுப்பு படித்து வருகிறார்.தந்தையை இழந்த இந்த மாணவியின் தாயார் மும்பையில் பணியாற்றுகிறார். இதனால்தனது மாமாவின் வீட்டில் வசித்து வந்தார்.
ஜான்சி மீது காதல் கொண்ட மோகன்குமார் அவரிடம் காதலை சொல்லியிருக்கிறார்.ஆனால், இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று கூறிவிட்டார் அந்த மாணவி.
இந் நிலையில் ஒரு வாரத்துக்கு முன் பள்ளி சென்ற ஜான்சி வீடு திரும்பவில்லை.இதனால் ஜான்சியின் மாமா, உறவினர்களின் வீடுகளில் தேடினார். போலீசிலும் புகார்தந்தார்.
போலீசார் தேடி வந்த நிலையில் இரு தினங்களுக்கு பிறகு ஜான்சி வீடு திரும்பினார்.
தன்னை மோகன்குமார் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகதெரிவித்துள்ளார் ஜான்சி.
இதையடுத்து ஆத்தூர் மகளிர் போலீஸார் மோகன்குமாரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications