கவுஸ் பாட்ஷா-பயோ டேட்டா
மதுரை:
மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கவுஸ் பாட்ஷா முதல்வர்கருணாநிதியின் மகன் அழகிரிக்கு மிக வேண்டியவர் ஆவார்.
44 வயதான பாட்சா 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் கடந்த மாநகராட்சி தேர்தலில் 40வது வார்டுகவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநகராட்சி துணை மேயராக இருந்த சின்னச்சாமி மரணமடைந்த பிறகுகடந்த ஆண்டு கவுஸ் பாட்ஷா துணை மேயராக தேர்வு செய்யப்பட்டார்.இவரது மனைவி மகீரா. இவர்களுக்கு அலி என்ற மகன் இருக்கிறார். தற்போது அவர் மதுரை மத்தியதொகுதிக்குட்பட்ட ஹாஜிமார் தெருவில் வசித்து வருகிறார்.
தீவிர திமுக விசுவாசியான கவுஸ் பாட்சா இளைஞர் அணியில் இருந்து படிப்படியாக மேலே வந்தவர். திமுகநடத்திய எல்லா போராட்டங்களிலும் பங்கேற்றவர். கட்சி போராட்டங்களில் பங்கேற்று பல முறை சிறை வாசம்அனுபவித்துள்ளார். அழகிரியின் சிபாரிசால் இந்த முறை எம்எல்ஏ சீட்டை வாங்கியுள்ளார்.
இனிப்பு வழங்கி கொண்டாட்டம்:
கவுஸ் பாட்ஷா வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் அவரது ஆதரவாளர்களும், திமுகதொண்டர்களும் இனிப்பு வழங்கினார்கள்.
பாட்ஷா நாளை காலை 10.30 மணி அளவில் தனது வேட்பு மனுவை மத்திய தொகுதி தேர்தல் அதிகாரிமூக்கையாவிடம் தாக்கல் செய்கிறார். இது தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர் வேலுச்சாமி வெளியிட்டுள்ளஅறிக்கையில்,
நாளை காலை திமுக வேட்பாளர் கவுஸ் பாட்ஷா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளார். இதையொட்டிதிமுக கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அணைவரும் கொடிகளுடன் திரண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications