ஐ.நா: சசி தரூருக்கு அமெரிக்கா ஆதரவில்லை?
டெல்லி:
ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வேட்பாளர் சசி தரூருக்குஅமெரிக்கா ஆதரவு தராது என்று தெரிகிறது.
ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு இந்தியாவின் சசி தரூர் போட்டியிடுகிறார்.மலையாளியான இவர் அமெரிக்காவில் வளர்ந்தவர். தற்போது ஐ.நாவில் துணைச் செயலாளராகஉள்ளார். இப்பதவிக்கு தென்கொரிய வெளியுறவு அமைச்சர் பான் கி மூன்உள்ளிட்டோரும் போட்டியிடுகின்றனர்.தற்போதைய நிலையில் பான் கி மூன் தான் போட்டியில் முன்னணியில் உள்ளார். சசிதரூர் 2வது இடத்தில் இருப்பதாக ஐநாவில் நடத்தப்பட்ட ரகசிய கருத்துக் கணிப்பில்தெரிய வந்துள்ளது.
சசி தரூருக்கு அமெரிக்கா ஆதரலாம் என எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால் தற்போது அமெரிக்காவின் போக்கில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. பான் கி மூனைஅமெரிக்கா ஆதரிக்கக் கூடும் என கூறப்படுகிறது.
![]() |
இதுதொடர்பாக அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஸ்ட்ரோப் டால்போட்கூறுகையில், தற்போது ஐ.நா. அமைப்பிலேயே பொறுப்பில் உள்ள ஒருவரையேஐ.நா. பொதுச் செயலாளராக தேர்வு செய்ய வேண்டுமா என்ற பெரிய கேள்வி நம்முன் உள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும் வட கொரிய பிரச்சனையில் பான் கி மூன் தனக்கு ஆதரவாக இருப்பார் எனஅமெரிக்கா கருதுகிறது. இந்தியா-ரஷ்யா இடையிலான நீண்ட கால நல்லுறவும்அமெரிக்காவுக்கு உறுத்தலாக உள்ளது. மேலும் இந்தியரை ஐ.நா. பொதுச்செயலாளராக்க அமெரிக்காவுக்கு மிக நெருங்கிய பாகிஸ்தான் விரும்பவில்லை.
அதே போல சீனாவும் விரும்பவில்லை. இது தொடர்பாக அமெரிக்கா-சீனாஇடையேயும் ஒருமித்த கருத்தே உள்ளது.
இதனால் சசி தரூரை அமெரிக்காது என்றே கூறப்படுகிறது.













Click it and Unblock the Notifications