டொரண்டோ: இந்திய விமானத்தில் குண்டு பீதி
Subscribe to Oneindia Tamil
டொராண்டோ:
டெல்லிக்குக் கிளம்பிய ஏர்-இந்தியா விமானத்தில் வெடிகுண்டுப் பீதி கிளம்பியதால் அந்த விமானம் அவசரம்அவசரமாக டொராண்டோ விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
கனடாவின் டொராண்டோ நகரிலிருந்து லண்டன் வழியாக டெல்லி வரும் ஏர் இந்தியா விமானம் 149பயணிகளுடன் கிளம்பியது. விமானம் சென்று கொண்டிருந்த போது கழிப்பறைக்குச் சென்ற விமான ஊழியர்ஒருவர் பரபரப்பாக திரும்பி வந்தார்.அங்கு ஒரு பைப் கிடப்பதாக விமானிகளிடம் தெரிவித்தார். அது பைப் வெடிகுண்டாக இருக்கலாம் என்றசந்தேகம் ஏற்பட்டதால் விமானம் மீண்டும் டொராண்டா நகருக்கே திருப்பப்பட்டது.
அங்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து அதிரடிப்படை போலீஸாரும், வெடிகுண்டுகளைகண்டறியும் நிபுணர்களும் விமானத்திற்குள் ஏறி சம்பந்தப்பட்ட பொருளை மீட்டனர். அது என்ன பொருள்என்பது தெரிவிக்கப்படவில்லை. ஆனால் முன்னெச்சரிக்கையாக அதை அழித்து விட்டதாக போலீஸார்தெரிவித்தனர்.
அதன் பின்னர் அந்த விமானம் மீண்டும் டெல்லிக்குக் கிளம்பியது.












Click it and Unblock the Notifications