தேர்தல் மன்னனின் 80வது போட்டி!
மதுரை:
தேர்தல் மன்னன் என்று வர்ணிக்கப்படும் பத்மராஜன், மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். இவர் தேர்தலில் போட்டியிடுவது இது 80வது முறையாகும்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையைச் சேர்ந்தவர் பத்மராஜன். ஹோமியோபதி வைத்தியம், பார்ட் டைம்பத்திரிக்கையாளர், கட்டிட காண்டிராக்டர் என பல முகம் இவருக்கு இருந்தாலும், தேர்தலில்போட்டியிடுவதையை முக்கிய கொள்கையாக வைத்துள்ளார் பத்மராஜன்.தமிழகத்தில் மட்டுமல்ல தேசிய அளவில் எந்தத் தேர்தல் நடந்தாலும், முக்கியத் தலைவர்கள, பிரமுகர்களைஎதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்பது இவரது பொழுதுபோக்கு. இதுவரை 79 முறை தேர்தலில்போட்டியிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலையும் இவர் விட்டு வைக்கவில்லை. ஆனால் இந்ததேர்தல்களில் இவரது வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.
இந்த நிலையில் 80வது முறையாக நேற்று மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்பத்மராஜன். சட்டசபை, மக்களவைத் தேர்தல்களில் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்வதில்லை. தொடர்பான செய்திகள்புமுன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், வாஜ்பாய், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை எதிர்த்துபோட்டியிட்டுள்ளேன்.
முதல்வர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பல்வேறு மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்களைஎதிர்த்துப் போட்டியிட்டுள்ளேன்.
எனது நோக்கம் வெற்றி பெறுவது அல்ல. அதிக தேர்தல்களில் போட்டியிட்டு சாதனை படைப்பதே எனதுலட்சியம். இப்போது எனது பெயர் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்பதே எனது ஆசை, லட்சியம், அதை அடையவே தொடர்ந்து போட்டியிட்டு வருகிறேன்.
எனது மகன் ராஜராஜன் நம்பியார் மூன்றரை வயதாக இருக்கும் போதே பெருந்துரை இடைத் தேர்தலில் மனுதாக்கல் செய்தான். ஆனால் வயது குறைவாக இருந்ததால் மனுவைத் தள்ளுபடி செய்து விட்டனர் என்றார்பத்மராஜன்.
சாதனைக்காக மட்டுமே தேர்தலில் போட்டியிடுவதாக கூறும் பத்மராஜன் சொல்வதை கேட்கும்போதுவேதனையாகத்தான் இருக்கிறது!












Click it and Unblock the Notifications