பயந்தால் கட்சி நடத்த முடியாது: விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை:

யாருக்கும் பயந்தால் கட்சி நடத்த முடியாது. நான் பயத்திற்கு அப்பாற்பட்டவன் என்று நடிகரும், தேமுதிகதலைவருமான விஜயகாந்த் கூறியுள்ளார்.

விஜயகாந்த் நடித்து வரும் தர்மபுரி படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே நடந்து வருகிறது.படப்பிடிப்பு இடைவேளையில் விஜயகாந்த் நிருபர்களிடம் பேசுகையில், ஆளுங்கட்சியின் பலம் இடைத்தேர்தல்களில் அதிகம் இருப்பதாக கூறுகிறார்கள். யாருக்கும் பயந்தால் ஒன்றும் நடக்காது, கட்சியை நடத்தமுடியாது.

யாருக்கும் நான் பயப்பட மாட்டேன். பயத்திற்கு அப்பாற்பட்டவன் நான். அந்தத் தொகுதியை (மதுரை மத்தி)யாருக்கும் பட்டா போட்டுக் கொடுத்துவிடவில்லை. எனக்கும் பட்டா கிடையாது. அவர்களுக்கும் கிடையாது.யார் வேண்டுமானாலும் அங்கு வெல்லலாம். யாருக்கு வெற்றிக் கனியைக் கொடுப்பது என்பதை மக்கள்தான்முடிவு செய்ய முடியும்.

மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் யார் என்பதை இன்னும் 3 நாட்களில் முடிவு செய்து அறிவிப்பேன்.இப்போதைக்கு 7 பேரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. மதுரை சென்று இறுதிக் கட்டமாக ஆலோசித்தபின்னர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பேன் என்றார் விஜயகாந்த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+