விமானத்தில் மலேசிய பயணி மப்பு டான்ஸ்
சென்னை:
மலேசியா செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணி ஒருவர் குடிபோதயிைல்பாட்டுப்பாடி ஆடியதால் அவரை கீழே இறக்குவதற்கு பாதுகாப்பு அதிகாரிகள்படாதபாடுபட்டனர். இதனால் விமானம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
மலேசியாவை சேர்ந்தவர் ராஜதுரை (40). இவர் தனது நண்பர்கள் 4 பேருடன்சபரிமலை கோயிலுக்கு செல்வதற்காக கடந்த வாரம் மலேசியாவில் இருந்து சென்னைவந்தார். சபரிமலை சென்று விட்டு தரிசனம் முடிந்த பின்னர் ராஜதுரை மற்றும்நண்பர்கள் மலேசியா புறப்பட்டுச் செல்ல டிக்கெட் எடுத்திருந்தனர்.இரவு 11.45 மணிக்கு கோலாலம்பூர் செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் புறப்படத்தயாரானது அப்போது விமான நிலையத்துக்குள் வந்த 5 பேரும் குடிபோதையில்இருந்தனர். இதில் ராஜதுறை மட்டும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தார்.
விமானத்தில் ஏறியதும் மது மயக்கத்தில் அவர் கலாட்டா செய்யத் தொடங்கினார்.விமானத்துக்குள்ளேயே பாட்டுப் பாடி நடனம் ஆடத் தொடங்கினார். இதனால்கோபமடைந்த விமான பணிப்பெண்கள் பைலட்டுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் உதவியுடன் குடிபோதையில் தள்ளாடியபடிஆடிக்கொண்டிருந்த ராஜதுரை விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டார். இந்தசம்பவத்தால் சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றது.












Click it and Unblock the Notifications