ஜெவின் சிக்குன் குனியா அரசியல்-திமுக தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சிக்குன் குனியாவால் தமிழகத்தில் 232 பேர் உயிரிழந்திருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாகூறியிருப்பது தவறான தகவல் என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

சிக்குன் குனியாவுக்கு ஏராளமானோர் பலியாகியிருப்பதாக ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார். அப்படிஇறந்திருந்தால் அவர்கள் குறித்த விவரங்களை வெளியிட ஜெயலலிதா தயாரா என்று முதல்வர் கருணாநிதிசவால் விட்டிருந்தார்.

இதற்கு நேற்று பதிலளித்த ஜெயலலிதா சிக்குன் குனியாவுக்கு 232 பேர் இறந்திருப்பதாக அறிக்கை ஒன்றில்தெரிவித்தார். இறந்தவர்களின் பட்டியலையும் வெளியிட்டார்.

இந்த அறிக்கைக்கு ஆற்காடு வீராசாமி பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

232 பேர் சிக்குன் குனியாவால் இறந்திருப்பதாக ஜெயலலிதா கூறியுள்ளார். ஆனால் அவர் கொடுத்த பட்டியலில்இருந்தவர்கள் எப்படி இறந்தார்கள் என்பதை விசாரித்து பார்த்தபோது யாருமே சிக்குன் குனியாவால்இறக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த வெங்கடாச்சலம் என்பவர் சிக்குன் குனியாவால் இறக்கவில்லை.நுரையீரல் புற்று நோய் காரணமாக இறந்திருப்பதாக அம்மாவட்ட ஆட்சித் தலைவர் பதில் அனுப்பியுள்ளார்.

இப்படித் தான் மற்றவர்களும் பல்வேறு காரணங்களினால் இறந்துள்ளனர். யாருமே சிக்குன் குனியாவால்இறக்கவில்லை. ஜெயலலிதா இவ்வளவு பெரிய பட்டியலை வெளியிட்டுள்ளார். ஆனால் சென்னையைச் சேர்ந்தயாருமே இப்பட்டியலில் இடம்பெறவில்லை. இத்தனைக்கும் சென்னையில் தான் அதிகம் பேர் இறந்திருப்பதாக ஜெயலலிதா கூறி வந்தார்.

சென்னையில் இறந்ததாக பட்டியலை வெளியிட்டால் குட்டு உடைந்து விடுமே என்ற பயத்தில் தான் அந்தப்பட்டியலை ஜெயலலிதா வெளியிடவில்லை. சிக்குன் குனியாவை தேவையில்லாமல் அரசியலாக்குகிறார்ஜெயலலிதா என்று கூறியுள்ளார்ஆற்காடு வீராசாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+