முரசு கேட்கும் தேமுதிக!
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக வேட்பாளர்களுக்கு முரசு சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கோரி தேர்தல்ஆணையரிடம் அக்கட்சி விண்ணப்பித்துள்ளது.
இதுகுறித்து தேமுதிக பொதுச் செயலாளர் ராமுவசந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிக சார்பில்அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், மாநில துணைச் செயலாளர்கள் பார்த்தசாரதி, ஏ.ஜி.சம்பத், ஆஸ்டின்,தொழிற்சங்க செயலாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் மாநில தேர்தல் ஆணையரை சந்தித்தனர்.உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கோரி விண்ணப்பம் கொடுத்தனர்.கடந்த சட்டமன்றத் தேர்தலில் 232 தொகுதிகளில் போட்டியிட்டு மக்களிடம் நன்றாக அறிமுகம் ஆனதாலும்,சுமார் 28 லட்சம் ஓட்டுக்கள் பெற்று மொத்த ஓட்டுப் பதிவில் 8.33 சதவீதம் ஓட்டுக்களைப் பெற்றுள்ளதாலும்,மற்ற அரசியல் கட்சிகளைப் போல தேமுதிகவுக்கு முரசு சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இதுகுறித்து டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதையும் தேமுதிக குழுவினர்ஆணையரிடம் தெரிவித்தனர். சட்ட ஆலோசனைகளைப் பெற்று தேமுதிகவின் கோரிக்கை குறித்து பரிசீலித்துமுடிவெடுப்பதாக தேர்தல் ஆணையர் தெரிவித்தார் என்று கூறியுள்ளார் ராமு வசந்தன்.












Click it and Unblock the Notifications