குஜராத் முன்னாள் முதல்வர் மனைவி தீயில் பலி
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்:
குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேஷுபாய் படேலின் மனைவி தீ விபத்தில்பலியானார்.
பாஜகவைச் சேர்ந்த குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேஷுபாய் படேலின் வீடு,அகமதாபாத்தில் உள்ளது. இன்று காலை 7 மணியளவில் இங்கு பெரும் தீ விபத்துஏற்பட்டது. வீட்டினுள் தீ வேகமாக பரவியது.அப்போது ஒரு அறையில் இருந்த கேஷுபாய் படேலின் மனைவி லீலாபென் தீயில்சிக்கிக் கொண்டார். உடல் நலக்குறைவினால் அவர் பாதிக்கப்பட்டிருந்ததால் லீலாபென்னால் அறையிலிருந்து தப்பிக்க முடியவில்லை. இதனால் அவர் தீயில் கருகிபரிதாபமாக இறந்தார்.
மற்றொரு அறையில்,கேஷுபாய் படேல் இருந்ததால், அவர் தப்பித்தார். தீ விபத்தில்இறந்த லீலா பென்னுக்கு வயது 74 ஆகும். மின் கசிவே இந்த தீவிபத்துக்குக் காரணம்எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications