பெரியாறு அணை: கேரளம் மீண்டும் பிடிவாதம்
திருவனந்தபுரம்:
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை மேலும் உயர்த்த முடியாது என கேரள சட்டசபையில்நீர்ப்பாசனத்துறை அமைச்சர் என்.கே.பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.
கேரளா, தமிழ்நாட்டின் எல்லையில் உள்ள முல்லை பெரியாறு அணையின் தற்போதைய உயரம் 136 அடி. இந்தஅணையின் உயரத்தை அதிகரித்தால் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் கிடைக்கும். இதனால் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்ந்த தமிழக அரசு கோரியது.இதை கேரளம் ஏற்காததால் உச்ச நீதிமன்றத்தை அணுகியது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அணையின்உயரத்தை 142 அடியாக உயர்ந்த உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை அமல்படுத்த முடியாது என்றும்,அமல்படுத்தினால் அணையை ஒட்டியுள்ள 5 மாவட்ட மக்கள் பாதிக்கப்படுவர் என்றும் உச்ச நீதிமன்றத்தில்கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்து இருக்கிறது.
இந் நிலையில் பிரதமர் மன்மேகான் சிங்கை, கேரள முதல்வர் அச்சுதானந்தன் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள்சந்தித்து இப்பிரச்சனை குறித்து பேசினார்கள்.
நேற்று கேரள சட்டசபையில் இந்த பிரச்சனை பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது நீர்ப்பாசனத்துறை அமைச்சர்என்.கே.பிரேமச்சந்திரன் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது,
முல்லைப் பெரியாறு அணை 110 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய அணை. அது தற்போது மிகவும்பலவீனமாக இருக்கிறது. எனவே அதன் தற்போதைய உயரத்தை மேலும் உயர்த்த முடியாது.
அணையில் உயரத்தை அதிகமாக்கினால், அணை உடையும் ஆபத்து ஏற்படும். இதனால் இடுக்கி, எர்ணாகுளம்,ஆலப்புழை உள்பட 5 மாவட்ட மக்களின் உயிர், உடமைகள் பாதிக்கப்படும். சமீபத்தில் பெரியாறு அணையின்பலத்தையும், கழிவு நீரையும் ஆய்வு செய்யும் குழுவினர், அணைக்கு சென்று சோதனை நடத்தினார்கள். இதற்குதமிழக அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.
கடந்த ஆகஸ்டு 18ம் தேதி அணையில் பகுதியில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த அதிர்ச்சியால் அணையின்மேல்பகுதி பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் மிகச் சிறிய அதிர்வு ஏற்பட்டால் கூட அணை பலம் இழக்க வாய்ப்புஉண்டு என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த பிரச்சனை குறித்து தமிழக முதல்வருக்கு, கேரள முதல்வர் கடிதம் எழுதி இருக்கிறார். இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கேரள முதல்வரின் கருத்துக்கு, தமிழக முதல்வரிடம் இருந்து திருப்தியான பதில்வரவில்லை என அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications