யாருடன் கூட்டணி? பாஜக இன்று முடிவு
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து இன்று பாஜக முடிவு செய்கிறது.
தமிழக பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது. இதையடுத்து புதிய தலைவர்தேர்வு நடைபெற்றது. தலைவர் பதவிக்கு இல.கணேசன் மட்டும் மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்குஆதரவாக தற்போதைய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர்உள்ளிட்டோர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.மனுதாக்கல் முடிந்த போது இல.கணேசன் மட்டும் மனு தாக்கல் செய்திருந்தார். இதனால் அவர் போட்டியின்றிதேர்வாகியுள்ளார். இன்று இல.கணேசன் தேர்வு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
தேர்தலையொட்டி டெல்லியிலிருந்து வந்திருந்த மேலிடப் பார்வையாளரான ராம் நாயக் பின்னர்செய்தியாளர்களிடம் கூறுகையில், கட்சித் தலைவர் தேர்தலை மேற்பார்வையிடுவதற்காக வந்துள்ளேன்.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து இன்று முடிவு செய்யப்பட்டுஅறிவிக்கப்படும்.
கடந்த 2 ஆண்டுகாளாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. கடந்த 28 மாதத்தில்பெட்ரேல் விலை கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. அதை அவர்கள் கட்டுப்படுத்த தவறி விட்டார்கள். பாஜகஆட்சியின் போது 1 கோடியே 10 லட்சம் பேருக்கு சமையல் எரிவாயு இணைப்பு கொடுக்கப்பட்டது.
ஆனால் தற்போதைய காங்கிரஸ் ஆட்சியில் சமையல் எரிவாயு இணைப்பு கேதடு 4 கோடி பேர்காத்திருக்கிறார்கள். ஆனால் அதே நேரத்தில் கள்ள மார்க்கெட்டில் திருட்டு தனமாக சமையல் எரிவாயுசிலிண்டரை விற்பனை செய்கிறார்கள். இது தான் காங்கிரஸ் ஆட்சியின் நிலை என அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications