எங்களால் ஆயுதங்கள் தயாரிக்க முடியும்-நக்ஸல்கள்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
எங்களால் ராக்கெட்டுகள், லாஞ்சர்கள் தவிர மேலும் பல ஆயுதங்களையும் தயாரிக்க முடியும் எனநக்ஸலைட்டுகள் அறிவித்துள்ளனர்.
சென்னையில் நக்ஸல்களுக்கு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு ஆந்திராவுக்கு கடத்தப்பட்ட விவகாரம்பூதகரமாகியுள்ள நிலையில் சிபிஐ-மவோயிட்டு நக்ஸல் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜனார்தன் ஒருஅறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில்,
நக்ஸல்களிடம் ராக்கெட்டுகள், லாஞ்சர்கள் உள்ளன. இவற்றை காவல் நிலையங்கள், நக்ஸல் எதிர்ப்பு சிறப்புப்போலீஸ் படைகள், திருட்டு போலீசார், அரசியல்வாதிகள், ஆதிக்க வர்க்கத்தினர், அவர்களது கூலிப் படைகள்ஆகியோர் மீது பயன்படுத்துவோம்.
எங்களிடம் உள்ளவற்றில் சில ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்துவிட்டால் எங்கள் இயக்கப் பணிகள்ஏதும் பாதிக்கப்படாது. எங்களுக்கு ஆயுதம் வரும் வழிகளை போலீசாரால் முழுவதுமாக தடை செய்யவேமுடியாது.
சமீபத்தில் சிக்கிய எங்களது ஆயுதங்களால் நாட்டுக்கே ஆபத்து என்று பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது என்றுகூறியுள்ளார் ஜனார்தன்.












Click it and Unblock the Notifications