தொழிலதிபர் வீட்டில் 100 பவுன் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தொழிலதிபர் வீட்டில் 100 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன. இது தொடர்பாக வேலைக்கார பெண்களிடம்விசாரணை நடந்து வருகிறது.
சென்னை முகப்பேரி மேற்கு நாலாவது பிளாக்கில் வசிப்பவர் அண்ணாமலை. இவர் மை தயாரிக்கும்தொழிற்சாலை நடத்தி வருகிறார்.இவரது வீட்டில் இரு பெண்கள் வேலை செய்து வருகின்றனர். இந் நிலையில் அண்ணாமலை வீட்டில் பீரோவைதிறந்து பார்த்தபோது அதிலிருந்த 100 பவுன் நகைகளைக் காணவில்லை.
இதையடுத்து ஜெ.ஜெ. நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.பீரோவில் இருந்து கைரேகைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வீட்டில் வேலை செய்யும் பெண்கள் மீதே சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் அவர்களிடம் போலீசார் தீவிரமாகவிசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications