அயோத்தியில் ராமர் கோவில் என் கனவு-அத்வானி
குஜராத்:
அயோத்தியில் ராமர் கோவில் காட்டுவது எனது கனவு என பாஜக மூத்த தலைவர்அத்வானி கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் ஜனநாத் மாவட்டத்தில் உள்ள சோம்நாத் கோவிலில் இருந்து தான்அத்வானி 1990ம் ஆண்டு ரத யாத்திரையை தொடங்கினார். ஆண்டுதோறும் அத்வானிஇந்தக் கோவிலுக்கு வருவது வழக்கம்.அதே போல் நேற்றும் அத்வானி சோம்நாத் கோவிலுக்கு வந்தார். சிறப்புப் பூஜையில்கலந்து கொண்ட பின் நிருபர்களிடம் கூறுகையில்,
ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் சோம்நாத் கோவிலுக்கு வருகிறேன். கடந்த 16ஆண்டுகளாக இங்கு வந்து சிறப்பு தரிசனத்தில் பங்கேற்றுள்ளேன். அயோத்தியில்ராமர் கோவில் கட்டுவது தான் எனது கனவு என்றார்.
வந்தே மாதரம் பாடுவது கட்டாயமாகும்:
இதற்கிடையே பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில்,
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வந்தே மாதரம் பாடுவதை கட்டாயம் ஆக்குவேம். இதற்கான அரசியில் சட்டத்தின் 51வது பிரிவில் திருத்தம்செய்து, அதில் ஏற்கனவே இருக்கும் தேசிய கீதத்துடன் வந்தே மாதரம் பாடலையும் சேர்ப்போம்.
உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் வந்தே மாதரம் பாடல் பாடுவதை கட்டாயமாக்குவோம். வந்தே மாதரம்பாடலின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கலந்து கொள்ளாதது கண்டிக்கத்தக்கது என்றார்.












Click it and Unblock the Notifications