இந்திய தேர்வு குழு தலைவரான வெங்சர்க்கார்
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக வெங்சர்க்கார் நியமிக்கப்பட்டுள்ளார்.மும்பையில் நடந்த கிரிக்கெட் வாரியத்தின் பொதுக் குழுக் கூட்டத்தில் வாரியத் தலைவராக மத்திய அமைச்சர்சரத்பவார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இக் கூட்டத்தில் வெங்சர்க்கார் தேர்வுக் குழுத் தலைவராகதேர்வானார். கடந்த 4 ஆண்டுகளாக இந்தப் பதவியில் இருந்து கிரண் மோரேவின் பதவிக் காலம்முடிவடைந்துவிட்டதால் வெங்சர்க்கார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வெங்சர்க்கார் கூறுகையில்,
இந்தியா அணி தேர்வு குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போதுஅணியில் உள்ளவார்கள் நன்றாக விளையாடி வருகிறார்கள். மேலும் உலக கோப்பை போட்டியில் விளையாடசிறந்த அணியை தேர்வு செய்யும் பொறுப்பும் எனக்கு இருக்கிறது.
![]() |
முன்னாள் கேப்டன் கங்குலி மட்டும் அல்ல எந்த ஒரு வீரராக இருந்தாலும் திறமை இருந்தால் நிச்சயம் அணியில்இடம் கிடைக்கும். வீரர்கள் தேர்வில் நான் எந்த மண்டல பகுபாடும் பார்க்க மாட்டேன். அணி வீரர்கள் தேர்வின்போது தேர்வு குழுவினர் வெளிப்படையாக கலந்து ஆலோசித்து தான் தேர்வு செய்வோம். இதில் யார்தலையீட்டையும் அனுமதிக்க மாட்டேன்.
நான் சச்சின், கும்பளே போன்றோருடன் விளையாடி இருக்கிறேன். பதான், பார்த்தீவ், தினேஷ் கார்த்திக்ஆகியோருக்கு நான் பயிற்சி அளித்திருக்கிறேன்.
கேப்டன் பதவிக்கு மிகவும் பொருத்தமானவராக ராகுல் டிராவிட் இருக்கிறார். அதே போல பயிற்சியாளர் கிரேக்சேப்பலும் மிக திறமையானவர் என்றார்.













Click it and Unblock the Notifications