For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

1,30,962 பதவிகளுக்கு 4 லட்சம் பேர் போட்டி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இறுதிப்போட்டியில் உள்ளனர். சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் 155இடங்களுக்கு 1326 பேர் களத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் 6 மாநகராட்சிகள், 102 நகராட்சிகள், 50 மூன்றாம் நிலை நகராட்சிகள்,561 பேரூராட்சிகள், 12,618 ஊராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 29 மாவட்டபஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்காக வருகிற 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில்தேர்தல் நடைபெறவுள்ளது.

மொத்தம் 1 லட்சத்து 17 ஆயிரத்து 302 ஊரக உள்ளாட்சிப் பதவியிடங்கள், 13,660நகர்ப்புற உள்ளாட்சிப் பதவியிடங்கள் என மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரத்து 962பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த செப்டம்பர் 20ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வேட்பு மனு தாக்கல்நிறைவின் போது மொத்தம் 4 லட்சத்து 85 ஆயிரத்து 159 மனுக்கள்தாக்கலாகியிருந்தன. மனுக்கள் பரிசீலனையின்போது பல்வேறு காரணங்களால் 8,374மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நேற்றுடன் மனுக்களை வாபஸ் வாங்க கடைசிநாளாகும்.

கால அவகாச முடிவில் 4 லட்சத்திற்கும் சற்றே அதிகமானோர் போட்டியில் உள்ளனர்.தமிழகத்திலேயே மிகப் பெரிய மாநகராட்சியான சென்னையில் உள்ள 155 கவுன்சிலர்பதவிகளுக்கு 1326 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்தத் தேர்தலில் 4 கோடியே 64 லட்சத்து 19 ஆயிரத்து 395 வாக்காளர்கள் ஓட்டுப்போடவுள்ளனர். இவர்களுக்காக மொத்தம் 80,458 வாக்குச் சாவடிகள்அமைக்கப்படவுள்ளன. வாக்குச் சீட்டு அடிப்படையில் நடைபெறவுள்ள இந்ததேர்தலில் 2 லட்சத்து 42 ஆயிரம் வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளன.

13ம் தேதி நடைபெறும் முதல் கட்டத் தேர்தலில் சென்னை, கோவை, சேலம், நெல்லைமாநகராட்சிகள், 45 நகராட்சிகள், 23 மூன்றாம் நிலை நகராட்சிகள், 281பேரூராட்சிகள், 195 ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

15ம் தேதி நடைபெறும் 2வது கட்டத் தேர்தலில் மதுரை, திருச்சி மாநகராட்சிகள், 57நகராட்சிகள், 27 மூன்றாம் நிலை நகராட்சிகள், 280 பேரூராட்சிகள், 190 ஊராட்சிஒன்றியங்களில் தேர்தல் நடைபெறும். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரைவாக்குப் பதிவு நடைபெறும்.

18ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதன் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டகவுன்சிலர்களின் முதல் கூட்டம் 25ம் தேதி நடைபெறும். அதைத் தொடர்ந்து புதியமேயர்கள், துணை மேயர்கள், நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள்உள்ளிட்ட தலைவர்களை தேர்ந்தெடுக்க 28ம் தேதி மறைமுகத் தேர்தல்நடைபெறுகிறது. கவுன்சிலர்கள் கூடி இவர்களைத் தேர்வு செய்வார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X