காந்தியை அவமதித்த இடத்தைப் பார்த்த மன்மோகன்

Subscribe to Oneindia Tamil

ஜோஹன்னஸ்பர்க்:

தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி தங்கியிருந்தபோது, அவரை ரயிலிலிருந்து கீழே தள்ளி அவமதித்தஇடத்தை பிரதமர் மன்மோகன் சிங் பார்வையிட்டு உணர்ச்சிவசப்பட்டார்.

பிரதமர் மன்மோகன் சிங் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ளார். 4 நாட்கள் அங்கு சுற்றுப்பயணம் செய்கிறார்.அவருடன் மனைவி குருசரண் கெளர், சுற்றுலாத்துறை அமைச்சர் அம்பிகா சோனி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர்நாராயணன் உள்ளிட்டோரும் சென்றுள்ளனர்.

தென்னாப்பிரிக்காவில் தான் மகாத்மா காந்தி சத்தியாகிரகப் போராட்டத்தை தொடங்கினார். கடந்த 1906ம்ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சத்தியாகிரகப் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை மன்மோகன் சிங் தொடங்கிவைக்கிறார்.

தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு வந்து சேர்ந்த மன்மோகன் சிங் தனது முதல் விஜயமாக, சத்தியாகிரகப்போராட்டம் தோன்றக் காரணமான, மகாத்மா காந்தியை ரயிலிலிருந்து கீழே தள்ளி விடப்பட்ட பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்திற்கு சென்றார்.

இந்த ரயில் நிலையத்தில் தான் வெள்ளையர்களுக்கான பெட்டியில் பயணம் செய்ததற்காக காந்தியைவெள்ளையர்கள் கீழே தள்ளி விட்டனர். இந்த இடத்தைப் பார்வையிட்ட மன்மோகன் சிங் உணர்ச்சி வசப்பட்டநிலையில் காணப்பட்டார்.

பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர் புத்தகத்தில் அவர் தனது கருத்துக்களைப் பதிவு செய்தார்.

பின்னர் காந்தியடிகள் பயணம் செய்த அதே ரயிலில் பென்ரிச் முதல் பீட்டர்மாரிட்ஸ் பர்க் வரை பயணம் செய்தார்மன்மோகன் சிங்.

தனது தென்னாப்பிரிக்க பயணத்தின்போது காந்தியடிகள் அடைக்கப்பட்டிருந்த சிறையையும் மன்மோகன் சிங்பார்வையிடுகிறார். காந்தி குறித்த புகைப்படக் கண்காட்சியையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

பின்னர் தென்னாப்பிரிக்க அதிபர் மெபோகியையும் சந்திக்கிறார். இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே 7ஒப்பந்தங்கள் இந்த பயணத்தின்போது கையெழுத்தாகின்றன. முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவையும்அவர் சந்திக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+