புதுவை முதல்வர் மீது ராமதாஸ் பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி:

ஜிப்மர் மருத்துவனை விவகாரத்தில் புதுவை காங்கிரஸ் அரசிடம் கருத்து கேட்கவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ்காட்டமாக கூறியுள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

ஜிப்மர் மருத்துவமனை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இந்தமருத்துவமனைக்கு தன்னாட்சி அந்தஸ்து தருவது தொடர்பாக மத்திய அமைச்சரவைமுடிவு எடுத்துள்ளது.

இந்த முடிவு பின்னர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வைக்கப்பட்டுவிவாதிக்கப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்பதுலுக்கு அனுப்பப்படும். அதன் பின்னர்சட்டமாகும். இதில் எந்த இடத்திலும் புதுவை காங்கிரஸ் அரசின் பங்கு வரவில்லை.

எனவே புதுவை அரசிடம் கருத்து கேட்க வேண்டிய அவசியம் இல்லை, தேவையும்இல்லை.

ஜிப்மர் பிரச்சினை பெரிதாக புதுவை அரசும் ஒரு காரணம். இந்த விவகாரத்தில்புதுவை முதல்வர் ரங்கசாமி நிர்வாகரீதியில் சரியாக செயல்படவில்லை. புதுவையில்உள்ள சில தனியார் மருத்துவமனைகளின் தூ ண்டுதலால்தான் இந்த ஸ்டிரைக்கேநடந்தது.

மேலும், ஊழியர்கள் போராட்டத்தின்போது சரியான முறையில் போலீஸ் பாதுகாப்புகொடுக்கப்படவில்லை. இந்தப் பிரச்சினையை புதுவை அரசும், காவல்துறையும்முறையாக அணுகியிருந்தால் போராட்டமே நடந்திருக்காது.

ஜிப்மர் விவகாரத்தில் புதுவை முதல்வரின் செயல்பாடு குறித்து இதுவரை சோனியாகாந்தியிடம் கூறவில்லை. நேரில் சந்திக்கும்போது தெரிவிப்பேன்.

புதுவை அரசு திமுக ஆதரவோடு இயங்கி வருகிறது. நாங்களும் ஆதரவுதெரிவிக்கிறோம். எனவே முதல்வரை மாற்ற வேண்டுமா என்பது குறித்து நாங்கள்முடிவெடுக்க முடியாது. காங்கிரஸும், திமுகவும்தான் இதில் முடிவெடுக்க முடியும்என்றார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+