மதிமுக நாஞ்சில் சம்பத் திடீர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Nanjil Sampath

மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் நேற்றிரவு திடீரென கைது செய்யப்பட்டார்.

வைகோவைப் போல படு காரசாரமாக பேசக் கூடிய சம்பத் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது திமுகதலைமையை மிகக் கடுமையாக சாடி பிரசாரம் செய்தார். மேலும் திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பஅரசியல் குறித்தும் அவர் தாக்கி வந்தார்.

அதிமுக-மதிமுக கூட்டணி ஏற்படவும் முக்கிய காரணமாக இருந்தார். தேர்தலுக்குப் பின்னரும் தொடர்ந்துகருணாநிதியையும் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனையும் தனிப்பட்ட முறையில் தாக்கி வந்தார்.

இந் நிலையில் சமீபத்தில் மதிமுகவில் இருந்து விலகினார் அதன்முன்னணித் தலைவர்களில் ஒருவரான விஜயாதாயன்பன். இவர் ஏராளமான மதிமுகவினரோடு திமுகவில் இணைந்தார்.

இதையடுத்து பொதுக் கூட்ட மேடைகளில் விஜயாவையும் நாஞ்சில் சம்பத் தரக் குறைவாக பேசி வந்தார்.

இந் நிலையில் விஜயா தாயன்பன் போலீஸில் புகார் ஒன்றைக் கொடுத்தார்.

அதில், மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத், கடந்த 28ம் தேதி எம்.ஜி.ஆர். நகரில் நடந்தமதிமுக பொதுக் கூட்டத்தில் என்னைப் பற்றி மிக அவதூறாகப் பேசினார். பெண் என்றும் பாராமல் என்னைமிகவும் கேவலமாகப் பேசிய நாஞ்சில் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதையடுத்து நேற்று மாலை வில்லிவாக்கத்தில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் சம்பத் பேசினார். அந்தஇடத்திற்குச் சென்ற பெரும் படையுடன் சென்ற போலீஸார், கூட்டம் முடியும் வரை காத்திருந்தனர்.

பொதுக் கூட்டம் முடிந்து இரவில் சம்பத் காரில் வீடு திரும்பினார். இரவு 11 மணியளவில் சம்பத்தை போலீஸார்வழிமறித்துக் கைது செய்தனர். சம்பத் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பின்னர் சம்பத்தை, சைதாப்பேட்டை 9வது குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

சம்பத்தை 18ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவரைசென்னை மத்திய சிறைக்கு கொண்டு சென்று போலீஸார் அடைத்தனர்.

மதிமுக கண்டனம்:

உள்ளாட்சித் தேர்தலில் நாஞ்சில் சம்பத் பிரசாரம் செய்வதைத் தடுக்கும் வகையிலேயே, அரசியல் பழி வாங்கும்நோக்குடன் சம்பத்தை போலீஸார் கைது செய்துள்ளதாக மதிமுக கூறியுள்ளது.

திமுக தலைமையின் தூண்டுதலே இதற்குக் காரணம் என்றும் மதிமுக கூறியுள்ளது.

நீண்ட காலமாக திமுகவில் இருந்த விஜயா தாயன்பன், வைகோ திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டபோதுதானும் வெளியேறி மதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சட்டசபைத் தேர்தலில் அண்ணா நகர் தொகுதியில் அமைச்சர் ஆர்க்காடு வீராசாமியை எதிர்த்துப்போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+