திமுக ஆட்சியை காங் கலைக்கும்-எஸ்எஸ்.சந்திரன்
மதுரை:
திமுக அரசை காங்கிரஸ் கட்சி கலைத்து விட திட்டமிட்டிருப்பதாக அதிமுக எம்.பி. எஸ்.எஸ்.சந்திரன்கூறியுள்ளார்.
மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை ஆதரித்துஎஸ்.எஸ்.சந்திரன் பிரசாரம் செய்தார். அவர் பேசுகையில்,மாட்டை கட்டுப்படுத்த மூக்கணாங்கயிறு அவசியம். அதுபோலத்தான், திமுக ஆட்சியின் மூக்காணங் கயிறாகராஜன் செல்லப்பா செயல்படுவார்.
ஜெயலலிதா மக்களுக்காக நிறைய செய்துள்ளார். அவர்களது குழந்தைகளுக்கு நிறைய நல்லது செய்துள்ளார்.ஜாதி, மத பேதம் பார்க்காமல் உதவியுள்ளார். கருணாநிதி மாதிரி பொய்யான, போலி வாக்குறுதிகளைக்கூறாதவர்.
நான் கருணாநிதியுடன் 35 ஆண்டுகள் இருந்தேன். அங்கு நொந்து நூலாகிதான் இங்கு வந்தேன்.
ஏகப்பட்ட இலவசங்களை அறிவித்தார் கருணாநிதி. இலவச டிவி தரப் போகிறேன் என்றார். ஆனால் 36,000பேருக்குத்தான் கொடுத்தார். அதேபோல 2 ஏக்கர் நிலத்தையும் முழுசாக தரவில்லை.
அவர் எல்லோருக்கும் இலவசமாக கொடுத்தது சிக்குன்குனியா நோயைத்தான்.
திமுக அரசு ஒரு மைனாரிட்டி அரசு. காங்கிரஸ் கட்சியை நம்பியிருக்கும் அரசு. ஆனால் காங்கிரஸை நம்பக்கூடாது. அவர்கள் பெருந்தலைவர் காமராஜரையே கைது செய்து உள்ளே தள்ளியவர்கள்.
மூப்பனாருக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு வந்தது. அதைக் கெடுத்தவர் யார்? கருணாநிதிதான் கெடுத்தார்.
இப்போது கூட ஆட்சியில் பங்கு கேட்டு வருகிறது காங்கிரஸ். கொடுக்க மறுக்கிறது திமுக. இப்படியே போனால்திமுக ஆட்சியையே கலைத்து விட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. எனவே இந்த ஆட்சி நீடிக்காது என்றார்எஸ்.எஸ்.சந்திரன்.












Click it and Unblock the Notifications