பணம் தீபாவளிக்கு, ஓட்டு தேமுதிகவுக்கு!

Subscribe to Oneindia Tamil

கோவை:

திமுக, அதிமுகவினர் பணம் கொடுத்தால் அதை தீபாவளி செலவுக்கு வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் ஓட்டைமட்டும் மறக்காமல் தேமுதிகவுக்கு போட்டு விடுங்கள் என்று கோவையில் கலக்கலாக தேர்தல் பிரசாரம் செய்தார்தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த்.

கோவை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் தீவிர பிரசாரம்செய்தார். அவர் பேசுகையில், எனது கூட்டணி மக்களுடன் தான். தங்களுக்குத் தாங்களே நூற்றுக்கு நூறு எனமார்க் போட்டுக் கொண்டு தங்களது குடும்ப டிவியில் விளம்பரப்படுத்திக் கொள்கின்றனர்.

காலையில் கொசு கடித்தால் காலரா, மாலையில் கடித்தால் மலேரியா, இரவில் கடித்தால் யானைக்கால் வியாதி,இடைவேளையில் கடித்தால் சிக்குன் குனியா. இப்படி இருக்கிறது நமது மாநிலத்தின் சுகாதாரம்.

கடந்த ஆட்சிகளில் கொசு ஒழிப்புக்காக மருந்தே அடிக்கவில்லை என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால்அவர்கள் அடித்த கொசு மருந்தை, உணவு என்று கொசு நினைத்து விட்டதோ என நினைக்கத் தோன்றுகிறது.

தைரியம் இருந்தால் கடந்த காலங்களில் ஆட்சி புரிந்த அதிமுகவும், திமுகவும் தங்களது சாதனைகளைச் சொல்லி,உள்ளாட்சித் தேர்தலில் தனியாக வந்து போட்டியிடட்டும், பார்க்கலாம். ஏதாவது நல்லது செய்திருந்தால் தானேஅதை சொல்லி ஓட்டு கேட்க முடியும்.

ஆனால் எனக்கு தன்மானம் இருக்கிறது. எனவே தான் யாருடனும் கூட்டணி வைக்காமல் மக்களுடன் மட்டும்கூட்டணி வைத்து போட்டியில் நிற்கிறேன்.

திமுக, அதிமுகவினர் பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதாக கூறப்படுகிறது. பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள், தீபாவளி செலவுக்கு ஆகும். அப்படியாவது அவர்கள் கொள்ளையடித்த பணம் மக்களுக்குப்போகட்டும். ஆனால் ஓட்டை மட்டும் தேமுதிகவுக்கு போட்டு விடுங்கள்.

மாணவர்களே, மாணவிகளே, உங்களுடைய நண்பர்களுக்கெல்லாம் உங்கள் சின்னம் தீபம் என்று கூறிசெல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்புங்க என்றார்.

முன்னதாக சேலம் மாநகராட்சி பகுதிகளில் விஜய்காந்த் பிரச்சாரம் செய்கையில்,

50 ஆண்டுகள் பாரம்பரியம் வாய்ந்த கட்சி என்று திமுகவினர் கூறுகின்றனர். அவர்களுக்கு கொள்ளை அடிப்பதுதான் வேலை. எங்களிடம் ஒருமுறை ஆட்சியை ஒப்படையுங்கள். சேலத்தை நான் மாற்றி காட்டுகிறேன்.

மேட்டூர் அணை எங்கள் ஆட்சியில் தான் மழை வந்து நிரம்பியது என்று திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும்பெருமை அடித்து கொள்கின்றன. ஏன், ராக்கெட் லாஞ்சர் எங்கள் ஆட்சியில் தான் கடத்தப்பட்டது என்று இருகட்சிகளும் சொல்லிக் கொள்ள வேண்டியது தானே?

திமுக ஆட்சிக்கு வந்தால் அராஜகம் நடக்கும் என்று அன்றே எம்ஜிஆர் கூறினார். அதுதான் தற்போது நடக்கிறது.விஜயகாந்தை முடக்க தேர்தலை குறுகிய காலத்தில் அறிவித்தனர். முரசு சின்னத்தை முடக்கினர். இருப்பினும்,தேர்தல் கமிஷன் அளித்த சின்னத்தில் தேமுதிக போட்டியிடுகிறது.

அதேபோல் திமுக உதயசூரியன் சின்னத்தை விடுத்து, போட்டியிட தயாரா என்றார் விஜய்காந்த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+