தமிழகத்தில் 13 புதிய பொருளாதார மண்டலங்கள்
டெல்லி:
தமிழகத்தில் புதிதாக 13 சிறப்பு பொருளாதார மையங்களை ஏற்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
டெல்லியில் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள அனுமதி வழங்குவதற்கானவாரியக் கூட்டம் நடந்தது. அப்போது தமிழகத்தில் புதிதாக 13 சிறப்பு பொருளாதார மண்டலங்களை தொடங்கஅனுமதி அளிக்கப்பட்டது.இதில் 7 மண்டலங்களுக்கு முறைப்படியான ஒப்புதலும், 6 மண்டலங்களுக்கு கொள்கை ரீதியிலான ஒப்புதலும்அளிக்கப்பட்டுள்ளது. முறைப்படி ஒப்புதல் அளிக்கப்பட்ட சிறப்பு மண்டலங்கள் விவரம்:
1. கோவையில் சுஸ்லான் கட்டமைப்பு நிறுவனம் சார்பில் 107 ஹெக்டேரில் அமையவுள்ள உயர் தொழில்நுட்பபொறியியல் பிரிவுக்கான மண்டலம்.
2. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொழில் பூங்காவில் 111 ஹெக்டேரில் சிறப்பு பொருளாதாரமண்டலம்.
3. காஞ்சிபுரத்தில் ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் தொழிலுக்காக புதிய பொருளாதார மண்டலம். 4. கோவைஈச்சனாரியில் தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலம். 5. பையனூரில் தகவல்தொழில்நுட்பத் துறை பொருளாதார மண்டலம்.
6. தாம்பலம் தாலுகா சோழிங்கநல்லூர் கிராமத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த சிறப்பு பொருளாதாரமண்டலம். 7. கோவை காளப்பட்டி கிராமத்தில் 26 ஹெக்டேரில் தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த சிறப்புபொருளாதார மண்டலம்.
கொள்கை அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டவை:
1. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உயிரி தொழில்நுட்ப அடிப்படையிலான மருந்து தயாரிப்பாக்கான சிறப்புமண்டலம்.
2. ஸ்ரீபெரும்புதூர் தாலுகா மண்ணூ
3. காஞ்சிபுரம் மாவட்டம் சீக்கினாகுப்பத்தில் 126 ஹெக்டேரில் ஆட்டோ உதிரி பாகங்கள் தயாரிப்புக்கான சிறப்புபொருளாதார மண்டலம்.
4. அதே பகுதியில் 121 ஹெக்டேரில் பல்நோக்கு சேவைகளை அமைப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
5. கிருஷ்ணகிரியில் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை தொழில் பூங்கா அமைக்க அனுமதி.
6. பெரம்பலூரில் 1225 ஹெக்டேரில் பலமுனை உற்பத்திக்கான சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்கடிட்கோ நிறுவனத்துக்கு அனுமதி.












Click it and Unblock the Notifications