சிலிண்டரை சுமந்தபடி சிரம பிரசாரம்!
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் நகராட்சித் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தனது சின்னமான கேஸ்சிலிண்டரை தூக்கியபடி கஷ்டப்பட்டு பிரசாரம் செய்து வருகிறார்.
தஞ்சை நகராட்சியின் 24வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடுபவர் செந்தில்ராஜ். இவருக்கு கேஸ் சிலிண்டர்சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள செந்தில்ராஜ், மக்கள் மனதில் தனது சின்னம்எளிதில் பதிய வேண்டும் என்பதற்காக நிஜ சிலிண்டருடன் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்து வருகிறார்.இதற்காக அவருடன் வரும் 2 பேர் ஆளுக்கொரு சிலிண்டரை கஷ்டப்பட்டு தூக்கியபடி வேட்பாளருடன்செல்கின்றனர். அவர்கள் தோள் மீது உள்ள சிலிண்டரை வாக்காளர்களிடம் காட்டி, ஐயா, அம்மா, இதுதான் எனதுசின்னம், இது உங்கள் சின்னம் மறக்காம ஓட்டுப் போட்டுடுங்க என்று கூறியபடி ஓட்டு வேட்டையாடுகிறார்செந்தில்ராஜ்.
வீடு தேடி சிலிண்டருடன் வரும் வேட்பாளர் செந்தில்ராஜின் நூதன பிரசாரம் வார்டு மக்களை நன்றாகவேகவர்ந்துள்ளது. ஆனால் பாவம் காலி சிலிண்டர்களை தூக்கி வருவோரின் நிலைதான் கொஞ்சம் கஷ்டமாகஉள்ளது. வலது தோளிலும், இடது தோளிலுமாக மாற்றி மாற்றி தூக்கிக் கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்வேட்பாளரின் தீவிர விசுவாசிகளான அந்த சிலிண்டர் தூக்கிகள்!












Click it and Unblock the Notifications