எஸ்.டி.டி கட்டணம் அதிரடி குறைப்பு!
டெல்லி:
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தொலைபேசி எஸ்.டி.டி. கட்டணம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள 1 கோடியே 16 லட்சம் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் இந்த சலுகையால்பலனடைவார்கள்.இதுகுறித்து பி.எஸ்.என்.எல். தலைவர் ஏ.கே.சின்ஹா செய்தியாளர்களிடம் கூறியதாவது:மாத வாடகையாக ரூ.180 அல்லது அதற்கு மேல் செலுத்தும் வாடிக்கையாளர்கள் அனைவரும் ஒரே இந்தியாதிட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இதன்படி 3 நிமிடங்களுக்கு ரூ.1 கட்டணத்தில் உள்ளூருக்கும், 1 நிமிடத்துக்கு ரூ. 1 கட்டணத்தில் இந்தியாமுழுவதும் பேச முடியும்.புதிய முறைப்படி இலவச அழைப்புகளின் எண்ணிக்கை 25லிருந்து 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
ஒரே மாநிலத்திற்குள் எஸ்.டி.டி. கட்டணம் தற்போதுள்ள ரூ.1.20லிருந்து ரூ.1 ஆக மாற்றப்பட்டுள்ளது.இதேபோல மாநிலங்களுக்கு இடையே எஸ்.டி.டி. பேச 58 சதவீத கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 1ம் தேதி முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கு வருவதாக சின்ஹா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications