எம்.எல்.ஏ. மீது தாக்குதல்: காங். கண்டனம்
சென்னை:
சோளிங்கர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அருள் அன்பரசு, அவரது தந்தையும் முன்னாள் எம்.பியுமானஅன்பரசு ஆகியோர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில், அன்பரசு, அருள் அன்பரசு, வேட்பாளர் ராஜராஜேஸ்வரி உள்ளிட்டோர்பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் அங்கு வந்து காங்கிரஸாரை சரமாரியாகத் தாக்கியது.இதில் அருள் அன்பரசுவின் சட்டை கிழிக்கப்பட்டது. காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு வந்ததால், தாக்குதல்நடத்திய கும்பல் அங்கிருந்து ஓடி விட்டது. இதுதொடர்பாக திமுகவினர் சிலர் மீது காங்கிரஸ் கட்சியினர்போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் தாக்குதலுக்கு ஆளான அருள் அன்பரசு, மாநில காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியை சந்தித்துநடந்த சம்பவம் குறித்து விளக்கினார். பின்னர் கிருஷ்ணசாமி இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்,ராணிப்பேட்டையில், முன்னாள் எம்.பி. அன்பரசு, எம்.எல்.ஏ. அருள் அன்பரசு, வேட்பாளர் ராஜராஜேஸ்வரிஆகியோர் கடுமயாக தாக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொலை வெறித் தாக்குதல் கண்டனத்துக்குரியது. அரசியல் ரீதியாக பழிவாங்கும் வகையில், சில சமூகவிரோதிகள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். முதல்வர் கருணாநிதி இதுதொடர்பாக தீவிர நடவடிக்கை எடுத்து தாக்குதலுக்குக் காரணமானவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications