ஈராக் போரில் 6.5 லட்சம் பேர் சாவு!

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

ஈராக் மீது அமெரிக்கா தலைமையிலான படைகள் தாக்குதலைத் தொடங்கிய பின்னர் இதுவரை 6 லட்சத்து 55ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் மேரிலேன்ட் நகரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பர்க் சுகாதார நிறுவனம் இதுதொடர்பாகஈராக்கில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இதன் முடிவுகள் தி லேன்செட் என்ற மருத்துவ இதழில்வெளியாகியுள்ளது.

அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படையினர் ஈராக்கில் ஊடுறுவியது முதல் தற்போது வரை ஈராக்கில்எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது. ஈராக்கில் உள்ள 47 இடங்களில்,1849 வீடுகளில், 12,801 பேரை சந்தித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு குறித்து ஆய்வாளர்கள் கில்பர்ட் பர்ஹாம் கூறியுள்ளதாவது: இந்த ஆய்வின் மூலம் அமெரிக்காதலைமையிலான படைகளின் தாக்குதல் மற்றும் வன்முறைச் சம்பவங்களுக்கு 6 லட்சத்து 55 ஆயிரம் பேர்கொல்லப்பட்டுள்ளனர்.

நாங்கள் சந்தித்த ஒவ்வொரு குடும்பத்திலும் பலர் உயிரிழந்துள்ளனர். அனைவருமே அமெரிக்காதலைமையிலான படையினரால்தான் கொல்லப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளதாக ஆய்வில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக் போரில் இந்த அளவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சிஅலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் போரில் இதுவரை 40,000 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக ஈராக்கில்தற்போது உள்ள அமெரிக்க ஆதரவு அரசு கூறியுள்ள நிலையில் ஆறரை லட்சம் பேருக்கும் மேல்கொல்லப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இந்த ஆய்வு முடிவுகளை இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் நிராகரித்துள்ளார். இதுகுறித்து பிளேரின்செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், இது சரியான ஆய்வு அல்ல. ஆய்வில் பயன்படுத்தப்பட்ட முறையைஏற்க முடியாது.

இந்த எண்ணிக்கையை நம்ப முடியவில்லை. இதில் உண்மை இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை. ஈராக்கில்உள்ள நிலைமையை சீர்குலைக்கும் விதமாக இந்த ஆய்வு அமைந்துள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.

ஈராக்கின் சில பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வை ஒரு நாடு முழுமைக்கான ஆய்வாக கருத முடியாது. இந்தஆய்வை ஆரம்பத்திலிருந்தே ஆதரிக்கவில்லை. இப்போதும் இதை ஏற்க முடியாது.

ஈராக்கில் உயிரிழந்தவர்கள் அனைவருமே தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்கள்தான். ஈராக் அரசோ,வெளிநாட்டுப் படைகளோ ஈராக்கியர்களைக் கொல்லவில்லை.தாக்குதல்களில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற விவரம் எங்களிடம்இல்லை. அதை தர வேண்டியது ஈராக் அரசின் வேலை என்றார் அவர்.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் இந்த அறிக்கையை நிராகரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,ஈராக்கில் ஏராளமான அப்பாவிகள் இறந்துள்ளதை நான் அறிவேன். அதேசமயம், இந்த அளவுக்குஇறந்திருப்பார்கள் என்று கூறப்படுவதை நான் நம்ப மாட்டேன், ஏற்க மாட்டேன் என்று கூறியுள்ளார். ஈராக்அரசும் இந்த ஆய்வறிக்கையை நம்ப மறுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+