பசுமைக் கரங்கள் திட்டம்: கருணாநிதி தொடங்கினார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பசுமைக் கரங்கள் திட்டம் என்ற பெயரில் கின்னஸ் சாதனைக்காக 7 லட்சம் மரக் கன்றுகளை நடும் திட்டத்தைமுதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
கோவையைச் சேர்ந்த ஈஷா அறக்கட்டளை, ஐ.நா. சபையின் பொதுத் தகவல் துறையுடன் இணைந்து தமிழகத்தில்கின்னஸ் சாதனை படைக்கும் வகையில், 7 லட்சம் மரக் கன்றுகளை நடும் திட்டத்தை மேற்கொண்டுள்ளது.பசுமைக் கரங்கள் திட்டம் என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாளை ஒரே சமயத்தில் 7லட்சம் மரக் கன்றுகள் நடப்படவுள்ளன. இத்திட்டத்தை சென்னையில் தமிழக முதல்வர் கருணாநிதி தொடங்கிவைத்தார்.
நேற்று காலை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டு முன்பு தொடக்க விழா நடந்தது. தனது வீட்டின்முன்பு இரண்டு மரக் கன்றுகளை கருணாநிதி நட்டு வைத்தார். முதல்வரின் மனைவி தயாளு அம்மாளும் இதில்கலந்து கொண்டு, மரக் கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, ஈஷா அறக்கட்டளை தலைவர் ஜக்கி வாசுதேவ்,தலைமைச் செயலாளர் திரிபாதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications