தமிழகம் முழுவதும் கன மழை
சென்னை:தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. வட கிழக்குப் பருவமழையின் தொடக்கமே இந்த மழைக்குக் காரணம் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 20ம் தேதி முதல் வட கிழக்குப் பருவ மழை தொடங்கும் என ஏற்கனவே வானிலைஆராய்ச்சி நிலையம் தெரிவித்திருந்தது. இதற்கேற்ப கடந்த சில நாட்களாகவே கடும் வெப்பம் குறைந்து காற்றுவீசத் தொடங்கியது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவுக்கு மேல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்யத்தொடங்கியது. தலைநகர் சென்னையிலும், புறநகர்ப் பகுதியிலும் மழை கொட்டோ கொட்டென்று கொட்டத்தொடங்கியது.
விடிய விடிய பெய்த மழை இன்று காலையிலும் நிற்காமல் தொடர்ந்து பெய்தது. பிற்பகல் 12 மணி வரை மழைநீடித்தது. இதேபோல தென் மாவட்டங்கள் பலவற்றிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
கோவை, சேலம், ஊட்டி உள்ளிட்ட மேற்குப் பகுதி மாவட்டங்களிலும் கூட நல்ல மழை பெய்துள்ளது.
வட கிழக்குப் பருவ மழையின் தொடக்கமே இந்த கன மழை என்று வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் தென் பகுதிகளிலும், வட மாவட்டங்களில் ஓரிருஇடங்களிலும் நல்ல மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications