தீபாவளி கொண்டாட்டம்: தமிழகத்தில் குதூகலம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:நாளை தீபாவளியையொட்டி தமிழகம் முழுவதும் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் கடைசி நேர ஷாப்பிங்கில்படு பிசியாக உள்ளனர்.

நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டிகடந்த ஒரு மாதமாகவே மக்கள் புதுத் துணிகள் வாங்கவும், பல்வேறு பொருட்களைவாங்கவும் ஆரம்பித்து விட்டனர்.

இந் நிலையில் விடிஞ்சா தீபாவளி என்ற நிலையில் கடைசி நேர ஷாப்பிங்கில்பொதுமக்கள் ஆர்வமாக ஈடுபட்டுள்ளனர்.

தலைநகர் சென்னையின் முக்கிய வணிகப் பகுதிகளான தி.நகர், பாண்டிபஜார்,பாரிமுனை, புரசைவாக்கம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பெரிய கடைகள் தல் பிளாட்பார கடைகள் வரை அனைத்தையும் மக்கள்கூட்டம் மொய்த்துக் கொண்டுள்ளது.

கடைசி நேரத்தில் மிகவும் குறைந்த விலைக்கு பிளாட்பாரத்தில் கடை விரித்துபொருட்கள் விற்கப்படும் என்பதால் அவற்றை வாங்க மக்கள் குவிந்துள்ளனர்.

செனனை நகரில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இன்றும்காலையில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இருப்பினும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் கடைசி நேர ஷாப்பிங்கில்ஈடுபட்டுள்ளனர். இதேபோல தமிழகம் முழுவதும் கடைசி நேர பர்ச்சேஸில் மக்கள்அலை மோதுகின்றனர்.

தீபாவளியையொட்டி பட்டாசு விற்பனையும், இனிப்புகள் விற்பனையும் படு சூடாகநடந்து வருகிறது.

வணிகப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதால் மக்கள் எந்தவிதப் பிரச்சினையும் இன்றி பொருட்களைவாங்கிச் செல்கின்றனர்.

தீபாவளியையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மக்களுக்குவாழ்த்து தெரிவித்து செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

தீபாவளியையொட்டி கையில் போனஸ், பணம் புரள்வதால் தங்கம் வாங்கவும் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் ஒரே நாளில் திடீரென தங்கத்தின்விலையும் அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+