சண்முகம் பதவி நீக்கம்: சபாநாயகர் மறுப்பு
சென்னை:அதிமுக எம்எல்ஏ எஸ்.வி.சண்முகத்தை, கட்சித் தாவல் தடைச் சட்டப்படி தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றஅதிமுகவின் கோரிக்கையை, சபாநாயகர் ஆவுடையப்பன் நிராகரித்துள்ளார்.
மதுரை மேற்குத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவான எஸ்.வி.சண்முகம், மதுரையில் நடந்த அரசு விழாவில் கலந்துகொண்டு அமைச்சர் ஸ்டாலினைப் புகழ்ந்து பேசினார். இதனால் அதிமுக தரப்பு அதிர்ச்சி அடைந்தது.சண்முகத்திற்கு எதிராக மதுரை அதிமுகவினர் போராட்டம் நிடத்தினர்.
இந் நிலையில் கட்சி கொறடா உத்தரவை எஸ்.வி.சண்முகம் மீறி விட்டார். எனவே கட்சித் தாவல் தடைச்சட்டப்படி அவரை எம்.எல்.ஏ. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி சபாநிாயகர்ஆவுடையப்பனுக்கு, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடிதம் எழுதினார்.
இக்கடித்ததைப் பரிசீலித்த ஆவுடையப்பன் செங்கோட்டையனின் கோரிக்கையை நிரகாரிச்சுள்ளார்.
கட்சிக் கொறடா உத்தரவை எந்த வகையில், சண்முகம் மீறினார் என்பதை அதிமுக தரப்பு நிரூபிக்கவில்லை.எனவே சண்முகத்தை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்று தனது உத்தரவில் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications