காங்கிரசுக்கு திமுக அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
நாமக்கல்:நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சித் தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால் அக்கட்சிக்கு அங்கு ஒரு கவுன்சிலர் கூட இல்லை என்பதால் காங்கிரஸார் கடுப்பாகியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 3 பேரூராட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இசில் சேந்தமங்கலமும்ஒன்று. காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட பேரூராட்சிகளின் பட்டியலில் சேந்தமங்கலம் இடம் பெற்றிருப்பதை அறிந்தகாங்கிரஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
காரணம் இந்த பேரூராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு வார்டில் கூட வெற்றி கிடைக்கவில்லை. மொத்தம் 18வார்டுகள் இங்கு உள்ளன. இதில் 13 வார்டுகளில் சுயேச்சைகளும், திமுக 3 வார்டுகளிலும், அதிமுக 2வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
இந் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த பேரூராட்சி எப்படி ஒதுக்கப்பட்டது என்பது தெரியாமல் காங்கிரஸார்குழம்பியுள்ளனர். சுயேச்சைகளை வளைத்துப் போட்டால் மட்டுமே இங்கு காங்கிரஸ் கட்சியால் தலைவர்பதவியைப் பிடிக்க முடியும்.
இதேபோல, வெண்ணன்தூர், ஆலாம்பாளையம் ஆகிய பேரூராட்சிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஒன்று அல்லது 2கவுன்சிலர்கள்தான் உள்ளனர். எனவே இங்கும் எப்படி தலைமை பதவியை வெல்வது, எப்படி அந்தப் பதவியைதிறம்பட நடத்துவது என்று தெரியாமல் காங்கிரஸார் புலம்புகின்றனர்.
மேலும் தேர்தல் உடன்பாட்டின்போது காங்கிரசுக்கு 2 மாநகராட்சிகள் தருவதாக ஒப்புக் கொண்ட திமுகஇப்போது ஒரே ஒரு மாநகராட்சியை மட்டுமே தர திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.