திருச்சி-முட்டை ரவியின் கூட்டாளிகள் வன்முறை
திருச்சி:திருச்சி போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி முட்டை ரவியின் கூட்டாளிகள்,திருச்சி சுப்பிரமணியபுரத்தில் பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.
6 கொலை வழக்கு மற்றும் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய பிரபலரவுடி முட்டை ரவியை திருச்சி போலீஸார் நாவல்பட்டு அருகே ஞாயிற்றுக்கிழமைஅதிகாலை சுட்டுக் கொன்றனர்.
பயங்கர ரவுடியான முட்டை ரவி சுட்டுக் கொல்லப்பட்டதால் திருச்சி மக்கள் நிம்மதிஅடைந்துள்ளனர். ஆனால் அவனது கூட்டாளிகள் ஆத்திரமடைந்து நேற்று இரவுசுப்ரமணியபுரம் பகுதியில் வன்முறையில் இறங்கினர்.
அப்பகுதியில் வாகனங்கள் மீது கல்வீசியும், தடியால் அடித்தும் அவர்கள் தாக்குதல்நடத்தினர். இதில் ஒரு அரசுப் பேருந்து, ஒரு கார் ஆகியவற்றின் கண்ணாடிகள்உடைந்தன. தகவல் அறிந்ததும் போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். ஆனால்அதற்குள் அந்தக் கும்பல் தலைமறைவாகி விட்டது.
இதற்கிடையே, முட்டை ரவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அவனதுசகோதரன் முருகானந்தத்தின் வீட்டுக்கு அனுப்பப்பட்டது. முருகானந்தம் இன்னொருவழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
ரவியின் உடலை அவனது தாயார் செல்லம்மாள், சகோதரிகள் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.
ரவியின் உடல் இன்று தகனம் செய்யப்படவுள்ளது. இதையொட்டி திருச்சி நகரில்அசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு போலீஸார் உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
பெண் நீதிபதிக்கு மிரட்டல்-பாதுகாப்பு:
இந் நிலையில் முன்னதாக முட்டை ரவியை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்த மாஜிஸ்திரேட் பத்மாவுக்கு மிரட்டல் வந்துள்ளதாகத்தெரிகிறது.
போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டபோது தான் ரவி தப்பியோடினான். இதையடுத்தே அவனை தேடிப் போன போலீசார் அவனை சுட்டுக்கொன்றனர்.
இந் நிலையில் மாஜிஸ்திரேட் பத்மாவுக்கு முட்டை ரவியின் ஆட்களால் மிரட்டல் வந்துள்ளதையடுத்து அவருக்கும் அவரது வீட்டுக்கும் பலத்த பாதுகாப்புதரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications