சுமத்ரா தீவில் நிலநடுக்கம்
டெல்லி:இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்ஏற்பட்டது.
இன்று காலை 10.36 மணிக்கு வடக்கு சுமத்ரா தீவை மையமாகக் கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 5 ரிக்டராகபதிவாகியுள்ளது.
இந்த நில நடுக்கம் இந்தியாவில் உள்ள இந்திய வானிலை ஆராய்ச்சி நிலைய ரிக்டர்அளவுகோலில் பதிவாகியுள்ளது.
அந்தமான், நிக்கோபார் தீவுகளுக்கு அருகே உள்ள சுமத்ரா தீவில் நிலநடுக்கம்ஏற்பட்டதால் அந்தமானில் பீதி ஏற்பட்டது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால்சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக வடக்கு சுமத்ரா தீவில் பெரும் நடுக்கம் ஏற்பட்டது. சேதவிவரங்கள் குறித்து தகவல் இல்லை. இந்தப் பகுதியில் கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர்26ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி அலை தாக்குதல் ஏற்பட்டுபல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications