இலங்கைக்கு ஆயுதம் வழங்க பாஜக எதிர்ப்பு
சென்னை:இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவிகளை செய்யக் கூடாது என தமிழக பாஜக தலைவர் இல.கணேசன்கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் இல.கணேசன் பேசுகையில், இலங்கைப் பிரச்சினையில் இந்தியாதலையிட வேண்டும். இனப் பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண இந்தியா உதவ வேண்டும்.
இலங்கைக்கு எந்த வகையிலும் ஆயுத உதவிகளை இந்திய அரசு செய்யக் கூடாது. அப்படிச் செய்வதால்அங்குள்ள தமிழர்களுக்கு பாதகம் ஏற்படும்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டியதுவரவேற்புக்குரியது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் நல்லதொரு அரசியல் எதிர்காலம் ஏற்பட வாய்ப்புண்டு.
கச்சா எண்ணெயின் விலை சர்வதேச மார்க்கெட்டில் குறைந்துள்ளது. ஆனால் பெட்ரோல் விலையை மத்திய அரசுகுறைக்காமல் உள்ளது. இதைக் கண்டித்து வருகிற நவம்பர் 6ம் தேதி தமிழகம் முழுவதும் பாஜக சார்பில்ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் கணேசன்.












Click it and Unblock the Notifications