For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடு முழுவதும் வங்கி பணிகள் முடங்கின

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:வங்கிப் பணிகளை தனியாரிடம் அவுட்சோர்ஸிங் விடுவதை எதிர்த்து நாடு முழுவதும்10 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம்மேற்கொண்டுள்ளனர்.

பொதுத்துறை வங்கிகளின் பணிகளை அவுட்சோர்சிங் முறையில் தனியாரிடம் விடஅரசு முடிவு செய்துள்ளது. இதற்கு வங்கிப் பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

அவுட்சோர்சிங்குக்கு வங்கிப் பணிகளை விடக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள தேசியமயமாக்கப்பட்டவங்கிகள் மற்றும் சில தனியார் வங்கிகளின் ஊழியர்கள் இன்று ஒரு நாள் அடையாளவேலைநிறுத்தம் மேற்கொள்கின்றனர்.

மொத்தம் 9 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள் இந்தவேலைநிறுத்தத்தில் கலந்து கொள்கின்றனர். இதனால் வங்கிப் பணிகள் முழுமையாகபாதிக்கப்படும். தமிழகத்தில் 75,000 ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில்பங்கேற்கிறார்கள்.

இன்று காலை 10 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையம் எதிரே உள்ளஇந்தியன் வங்கி தலைமை அலுவலகம் எதிரே ஆயிரக்கணக்கான வங்கி ஊழியர்கள்கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X